tamilnadu

img

காஷ்மீரில் பதற்றத்தை உருவாக்கும் மோடி அரசு

புதுதில்லி, ஆக.3-  ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு படைகளை குவித்து, அம்மாநிலத்தின் நலனுக்கும், தேசத்தின் நலனுக்கும் தீக்குவிளைவிக்கும் விதத்தில் அரசியல் சாகசத்தில் ஈடுபட முயற்சிக்கிறதா மோடி அரசு என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு, ஆகஸ்ட் 3 சனிக் கிழமை விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மத்திய அரசு மேற்கொண்டுள்ள சமீ பத்திய நடவடிக்கைகளின் விளைவாக, ஜம்மு- காஷ்மீரில் ஒரு பதற்றமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மொத் தம் 35 ஆயிரம் படையினர் என்ற அள விற்கு, மேலும் கூடுதலாக துணை ராணு வப் படையினர் அங்கு குவிக்கப்பட்டி ருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்பு கிறது. அதன் நோக்கம் என்ன என்பது குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. அமர்நாத் யாத்திரை நடந்து கொண்டிருக்கிற நிலையில், முன் னெப்போதும் இல்லாத விதத்தில் திடீரென அது ரத்து செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு சுற் றுலா பயணிகள் உடனடியாக வெளி யேறுமாறு உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளன. இந்த சம்பவங்கள், காஷ்மீர் மக்களிடையே பெரும் பதற்றத்தையும், கொந்தளிப்பையும், என்ன நடக்குமோ என்ற அச்ச உணர்வையும் ஏற்படுத்தி யுள்ளது.

நாடாளுமன்றம் அமர்வில் உள்ள போதிலும், காஷ்மீரில் மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகள் தொடர்பாக, நாடா ளுமன்றத்தில் அரசு எந்த தகவலும் தெரி விக்கவில்லை; அறிக்கை ஏதும் தாக் கல் செய்யவில்லை. எந்தவொரு அர சியல் கட்சியிடமும் அங்குள்ள நிலைமை குறித்து விளக்கம் கூறப்படவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் தொடர்பாக மிகக் கடுமையான சில நட வடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறதோ என்ற பதற்றத்தையும், அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ள அரசியல மைப்புச் சட்டத்தின் பிரிவு 35 ஏ மற்றும் பிரிவு 370 ஆகியவற்றை பாதிக்கும் விதத்தில் மத்திய அரசின் நடவடிக்கை கள் இருக்கக் கூடுமோ என்ற பதற்ற மும் எழுந்துள்ளது. எனவே, ஜம்மு - காஷ்மீரில் மேற் கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு நாட்டு மக்களுக்கு முழு மையான விளக்கம் அளித்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு வலி யுறுத்துகிறது. ஜம்மு - காஷ்மீர் விவகா ரத்தில் நாட்டின் நலன்களுக்கு தீய விளைவுகளை ஏற்படுத்தும் விதத்தில் எந்தவொரு அரசியல் சாகசத்திலும் மத்திய அரசு ஈடுபடக் கூடாது. மாநி லத்தில் உள்ள அனைத்து தரப்பு அர சியல் சக்திகளுடனும் பேச்சுவார்த்தை துவக்கப்படும் என்ற தனது வாக்குறுதி யை மத்திய அரசு உடனடியாக நிறை வேற்ற வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக் குழு வற்புறுத்துகிறது.(ஐஎன்என்)